Saturday, March 31, 2007

ஏதேதோ மாற்றம்.....

ஏதேதோ மாற்றம் செய்து
என்னை நீ மாற்றினாயே
எனக்குள்ளே இருந்து கொண்டு
என்னை நீ வாட்டினாயே

உயிரை நீ எடுத்துவிட்டாய்
என் ஜீவன் தொலைத்துவிட்டாய்
மௌனத்தின் மொழியாலே
உன் காதல் சொல்லிச் சென்றாய்

என் காதல் தீரவில்லை
என் விழியும் மூடவில்லை
நீ மட்டும் போதும் கண்ணே
என் உயிரும் போகும் வரையில்

என் மூச்சில் நீதான் அன்பே
என் உயிரும் நீதான் என்பேன்
ஒரு வார்த்தை சொன்னாய் அன்று
உயிர் முழுதும் பறித்தாய் இன்று

வாழ்வு இருக்கும் காலம் வரையில்
உன் மடியில் சரணம் ஆவேன்
உயிர் விட்டுப் போகும் நொடியில்
எனக்குள்ளே உந்தன் ஜீவன்....


--------- சிம்புவோட காதல் அழிவதில்லை படத்தோட பார்க்காத போது போது பாட்டோட first 4 line ட்யூன் கொஞ்சம் பிடிச்சு போய் அந்த impression la எழுதினது..

8 comments:

balar said...

முதல் முறையாக இங்கே!..

தங்களின் 3 கவிதைகளும் அருமை...
தொடர்ந்து வரட்டும்...வாழ்த்துக்கள்..

:)

Sundari said...

@balar

Thanks for the visit

ACE !! said...

முதல் முறை வருகை இங்கே!!
சூப்பரா எழுதியிருக்கீங்க.. மிகவும் ரசித்தது

//மௌனத்தின் மொழியாலே
உன் காதல் சொல்லிச் சென்றாய்//

வாழ்த்துக்கள்!!!

Arunkumar said...

kalakkureenga sundari

Arunkumar said...

//
என் மூச்சில் நீதான் அன்பே
என் உயிரும் நீதான் என்பேன்
//
naan romba rasichadhu indha lines.

Unknown said...

ungal kavithai miga alagha ullathu

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

Arumai!
muyarchi thodarattum...

Anonymous said...

Hi sundari, Nice one.. keep up the good work

Ram