Wednesday, March 21, 2007

கவிதை கேளுங்கள்.............!!!!

ஒரு நாலு மாசம் பதிவு எதுவும் போடலை....
என்ன காரணம் ... ?

வேலை அதிகம் , சாப்பிடாம தூங்காம ஆபீஸ்லயே இருந்தேன்....., அப்படி இப்படின்னு பொய் எல்லாம் சொல்லாத நல்ல (ரொம்பவே நல்ல ) பொண்ணு நான்.

என்னோட சோம்பேறித்தனம் தான் ஒன் அன் ஒன்லி ரீசன்...

டைம் கிடைக்கும் போது எல்லாம் என் டைரியில் எழுதிய கிறுக்கல்களில் (?) ஒன்று...

ப்ரியமானவளே,

**விளையாடும் உன்
விழிகள் செய்த
வினையால்
விழுந்ததடி
என் இதயம்

**உதடுகள் கூட
உண்மையாக சிரிக்க
மறுக்கும் இவ்வுலகில்
உன் விழிகள் கூட
புன்னகைப்பதேன்

**வார்த்தையாய் நீ
பேசிய எதுவும்
வாக்கியமாய் என்
மனதில் நுழையாமல்
தடை செய்கிறது
உன் விழி பேசும்
மொழிகள்

**உறங்க நினைத்து
மூடிய என்
விழிக்குள், மூடாத
உன் விழிகள்
வஞ்சம் செய்வதேன்

**மலை போல் வளைந்த
உன் புருவங்களுக்கு
கீழ் , நதிபோல் உன்
இரு கண்கள்

**பேசாமல் பேச
வைக்கும்
பேசாத விழிகளே
விலகிப் போங்கள்
என் நினைவிலிருந்து...
கனவிலேனும்
உறங்க
ஆசை எனக்கு........