Saturday, March 24, 2007

கருவறை கதறல்.....

எழுந்து வா பாரதி
நீ கண்ட கனவுகளை
நனவாக்க
உன் ஆசைப்படி ஒரு
புது யுகம் படைக்க
பிறக்கவுள்ளேன் நான்


நிலவில் கால் வைக்கத்தானே
ஆசைப்பட்டாய் நீ
ஆனால் இதோ
நிலவில் ஒரு புது
மானிடம் படைக்க
பிறக்கவுள்ளேன் நான்

உன் வாக்குப்படி
நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
என் கருவறை பாடமாகிறது

உன் கனவினை
நிஜமாக்க
பிறக்கப் போகும்
என்னை இந்த
கருவறைக்குள் இருந்து
மட்டும் உயிரோடு
மீட்டுத் தர
எழுந்து வா பாரதி....

என் நிஜத்தை நிழலாக்கி
உன் ஆசைகளை சாம்பலாக்கி
என்னை
கருவுக்குள்ளே புதைக்கும்
இந்த மதியற்ற
மானிடம் கண்டு
எனை மீட்க
எழுந்து வா பாரதி ....

4 comments:

Arunkumar said...

rendu kavithaiyum romba nalla irukku sundari

Anonymous said...

Good one. Keep it up.

Anonymous said...

Good One. Keep it up.

Kannan said...

Nice one - expect much more